இந்தியாவில், தான்பெற்ற குழந்தையையே பெண்ணொருவர் கொலை செய்து, போலியாக நாடகமாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சென்னை வேளச்சேரியில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் தரைதளத்தில் வசித்து வரும் வெங்கண்ணா உமா தம்பதியருக்கு கடந்த மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நேற்றுமுன்தினம் காற்று வரவில்லை என குழந்தையின் பெற்றோர்கள் கதவை திறந்து வைத்து தூங்கியதாகவும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்க்கையில் அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை எனவும் வெங்கண்ணா உமா தம்பதியர் இருவரும் வேளச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
வேளச்சேரியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அதிகாலையில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை மார்பில் அணைத்தபடி சென்றதை கண்டு அந்த பெண்தான் குழந்தையை திருடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்க அந்த தெரு மற்றும் அந்த பெண் சென்ற சாலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஆனால் விசாரணையின் முடிவில் பெற்ற தாயே குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது மார்பில் வலி இருந்ததால் பால் கொடுக்க மறுத்துள்ளார் உமா. மேலும் அந்த வலியை போக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
இந்த மருந்துகளால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என அந்த மருந்தையும் எடுத்துகொள்ள கணவர் வெங்கண்ணா தடைவிதித்ததால் தொடர்ந்து குழந்தைக்கு பால் ஊட்ட மார்பு வலி ஏற்பட்டதாலும், கணவர் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தாய் உமாவே தனது ஒரு மாத ஆண் குழந்தையை கொன்று ஏரியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாய் உமாவை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM