பெற்றக் குழந்தைக்கு பாலூட்ட இயலாத தாய்: குழந்தையை கொன்று வீசி நாடகமாடிய கொடூரம்..!

Published By: J.G.Stephan

07 Oct, 2018 | 01:06 PM
image

இந்தியாவில், தான்பெற்ற குழந்தையையே பெண்ணொருவர் கொலை செய்து, போலியாக நாடகமாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

சென்னை வேளச்சேரியில் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் தரைதளத்தில் வசித்து வரும் வெங்கண்ணா உமா தம்பதியருக்கு கடந்த மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நேற்றுமுன்தினம் காற்று வரவில்லை என குழந்தையின் பெற்றோர்கள் கதவை திறந்து வைத்து தூங்கியதாகவும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்க்கையில் அருகில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை எனவும் வெங்கண்ணா உமா தம்பதியர் இருவரும் வேளச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

வேளச்சேரியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த  பொலிஸார் அதிகாலையில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை மார்பில் அணைத்தபடி சென்றதை கண்டு அந்த பெண்தான் குழந்தையை திருடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்க அந்த தெரு மற்றும் அந்த பெண் சென்ற சாலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஆனால் விசாரணையின் முடிவில் பெற்ற தாயே குழந்தையை கொன்ற அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது மார்பில் வலி இருந்ததால் பால் கொடுக்க மறுத்துள்ளார் உமா. மேலும் அந்த வலியை போக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

இந்த மருந்துகளால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என அந்த மருந்தையும் எடுத்துகொள்ள கணவர் வெங்கண்ணா தடைவிதித்ததால் தொடர்ந்து குழந்தைக்கு பால் ஊட்ட மார்பு வலி ஏற்பட்டதாலும், கணவர் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தாய் உமாவே தனது ஒரு மாத ஆண் குழந்தையை கொன்று ஏரியில் வீசிய அதிர்ச்சி சம்பவம் வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாய் உமாவை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10