கொங்கோ நாட்டின் மபுபா கிராமத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கர் லொறியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கொங்கோவின் கிங்சு நகரிலிருந்து 124 கி.மீ. தொலைவில் உள்ள கிப்சாசாவில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் உள்ள மபுபா கிராமத்தில் ஏரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கர் லொறியொன்று பஸ்ஸுடன் மோதியுள்ளது.
இதனால் எரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கரிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்படத் தொடங்கியபோது, கிராமவாசிகள் அதை சேகரிக்க விரைந்து சென்றனர். இதன் பின்னரே மேற்படி வாகனம் வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
விபத்தில் சிக்குண்டு 50 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாகவும், உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM