முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைப்பதற்கான நிதி எவையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பரந்தன் ஏ -35 வீதியின் நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஏ-35 வீதியில் மிக நீண்ட ஒரு பாலமாக காணப்படும்மேற்படி பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் முழுயைமாக சேதமடைந்துள்ளதுடன், பாலத்தின் உட்பகுதி மிக ஆபத்தானதாக காணப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.
கடந்த ஆண்டிலும் அதற்கு முன்னரும் சேதமடைந்து போக்கு வரத்துக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு போக்குவரத்;துக்கு விடப்பட்டுள்ளது.
இந்தப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரினடம் தொடர்புகொண்டுவினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
இந்த ஆண்டிலும் இப் பாலத்தை புனரமைப்பற்கான நிதி எதுவும் கிடைக்கவில்லை. வட்டுவாகல் பாலமானது முன்னுரிமைப்படுத்தப்பட்டு புனரமைப்படவேண்டிய ஒரு பாலமாக காணப்படுகின்றது. இதற்கான நிதியை கோரியிருக்கின்றோம். நிதி கிடைக்கும் பட்சத்தில் அதனைப் புனரமைக்க முடியும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலம் உள்ளிட்ட இரண்டு பாலங்ளை புனமைப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டில் அதற்கான நிதியை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM