இலங்கை மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

Published By: Vishnu

07 Oct, 2018 | 08:46 AM
image

அர­பிக்­க­டலில் உரு­வா­கி­யுள்ள தாழ­முக்க வலயம் இலங்­கையை நோக்கி நகர்ந்து வரு­வதால் அடுத்த 36 மணி நேரத்­துக்கு நாட்டில் கடும் காற்று, இடி மின்­ன­லுடன் கூடிய மழை பெய்யுமென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. 

இலங்­கையின் வடமேல் மாகா­ணத்தை நோக்கி நகர்ந்து வரும் தாழ­முக்க வல­யத்­தினால் குறித்த பிர­தே­சங்­களில் புயல்­காற்று வீசும் சாத்­தியம் இருப்­ப­தா­கவும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்­ச­ரித்­துள்­ளது. 

அந்த வகையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகும். அதே­வேளை வட­மத்­திய மாகாணம் மற்றும் தெற்கு மாகா­ணங்­களில் 100 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கலாம்.  

இந்தத் தாழ­முக்­கத்தின் கார­ண­மாக மன்­னா­ரி­லி­ருந்து புத்­தளம், கொழும்பு, காலி, மாத்­தறை மற்றும் ஹம்­பாந்­தோட்டை கடற்­பு­றங்­களில் கடும் காற்றும் இடி­யுடன் கூடிய மழையும் பெய்யும். இவ்­வாறு இடி­யுடன் கூடிய மழை­பெய்யும் போது மணிக்கு 70-–80 கிலோ­மீற்றர் வேகத்­திலும் அல்­லது அதை விட அதி­க­மா­கவும் காற்று வீசலாம். இதனால் கடலில் அலை­களின் உய­ரமும் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. 

களுத்­து­றை­யி­லி­ருந்து காலி, ஹம்­பாந்­தோட்டை மற்றும் பொத்­துவில் வரை­யான கட­லோ­ரங்­களில் எதிர்­வரும் நாட்­களில் கட­ல­லை­களின் உயரம் 2-2.5 மீற்றர் வரை உயரும் சாத்­தியம் இருக்­கின்­றது. இந்த உய­ரத்­தினால் கட­ல­லைகள் வீதிக்கு வரா­விட்­டாலும் இந்த அலை­களின் உயரம் மேலும் உய­ரக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் இருக்­கின்­றன. இதனால் கடலில் மீன்­பி­டிக்கச் செல்லும் மீன­வர்கள் இது தொடர்பில் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்­ச­ரித்­துள்­ளது.

மேலும், நாட்டின் பல பாகங்­களில் இடி மின்னல் தாக்­கங்கள் அதி­க­மாக இருக்கும். அதனால் பொது­மக்கள் திறந்த இடங்­க­ளிலோ, மைதா­னங்­க­ளிலோ, வயல்­வெ­ளி­க­ளிலோ, தோட்­டங்­க­ளிலோ அல்­லது மரங்­க­ளுக்கு கீழேயோ இருப்­பதைத் தவிர்த்து பாது­காப்­பான இடங்­களில் இருக்­க­வேண்டும். 

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் கைத்­தொ­லை­பேசி பாவ­னை­களை தவிர்த்­துக்­கொள்ளும் அதே­வேளை ஒரு­சில இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களின் பாவ­னை­க­ளையும் தவிர்க்­க­வேண்டும். சைக்கிள், மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை நீர்த்தேக்கங்களின் அருகில் இருக் கும்போதும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென்று வளிமண் டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32