அரபிக்கடலில் உருவாகியுள்ள தாழமுக்க வலயம் இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதால் அடுத்த 36 மணி நேரத்துக்கு நாட்டில் கடும் காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வடமேல் மாகாணத்தை நோக்கி நகர்ந்து வரும் தாழமுக்க வலயத்தினால் குறித்த பிரதேசங்களில் புயல்காற்று வீசும் சாத்தியம் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அந்த வகையில் அடுத்த 36 மணித்தியாலங்களில் வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். அதேவேளை வடமத்திய மாகாணம் மற்றும் தெற்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
இந்தத் தாழமுக்கத்தின் காரணமாக மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை கடற்புறங்களில் கடும் காற்றும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். இவ்வாறு இடியுடன் கூடிய மழைபெய்யும் போது மணிக்கு 70-–80 கிலோமீற்றர் வேகத்திலும் அல்லது அதை விட அதிகமாகவும் காற்று வீசலாம். இதனால் கடலில் அலைகளின் உயரமும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
களுத்துறையிலிருந்து காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடலோரங்களில் எதிர்வரும் நாட்களில் கடலலைகளின் உயரம் 2-2.5 மீற்றர் வரை உயரும் சாத்தியம் இருக்கின்றது. இந்த உயரத்தினால் கடலலைகள் வீதிக்கு வராவிட்டாலும் இந்த அலைகளின் உயரம் மேலும் உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், நாட்டின் பல பாகங்களில் இடி மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் திறந்த இடங்களிலோ, மைதானங்களிலோ, வயல்வெளிகளிலோ, தோட்டங்களிலோ அல்லது மரங்களுக்கு கீழேயோ இருப்பதைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைத்தொலைபேசி பாவனைகளை தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை ஒருசில இலத்திரனியல் உபகரணங்களின் பாவனைகளையும் தவிர்க்கவேண்டும். சைக்கிள், மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக்கொள்ளும் அதேவேளை நீர்த்தேக்கங்களின் அருகில் இருக் கும்போதும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென்று வளிமண் டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM