ஜப்பான் - இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம், இலங்கை வாகன இறக்குமதியாளர்களுடன் இணைந்து நேற்று கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடத்திய சினேகபூர்வ சந்திப்பில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
ஜனாதிபதி அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது, ஜனாதிபதியை சந்தித்த ஜப்பானில் வாழும் இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள், இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்கின்றபோது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவர்களது கருத்துக்கள், முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அக்கருத்துக்களை நிதியமைச்சுக்கும் வரவு செலவுத் திட்ட தயாரிப்பின்போது கவனத்திற்கொள்வதற்கும் முன்வைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பாராட்டு தெரிவித்த ஜப்பான் இலங்கை வாகன ஏற்றுமதியாளர்களின் சங்கங்கத்தினர் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றையும் வழங்கி வைத்தனர்.
ஜப்பான் இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களையும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்களையும் பாராட்டி ஜனாதிபதி விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தம்மிக்க கங்கானாத் திசாநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM