"அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுங்கள்" 

Published By: Vishnu

05 Oct, 2018 | 06:38 PM
image

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்தார்.

நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் 'வனரோபா' தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இன்று மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை சிறைகளில் தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக 107 பேர் இருக்கின்றனர். இவர்களில் 52 பேர் தற்போது நீதிமன்ற வழக்குகளில் இருக்கிறார்கள். நீதி மன்றம் தண்டனை அழித்தவர்களாக 55 போர் இருக்கின்றனர்.

இவர்கள் தமிழ் மக்களுக்காக அவர்களுடைய உரிமைக்காக, உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் தான் ஆயுத போராட்டத்திற்கு ஒரு சில உதவி செய்தனர். அவர்கள் அதற்குறிய வகையில் பத்து வருடத்திற்கு மேல் சிறையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.

அவர்கள் தங்களிடம் கேட்பது ஒருவருடமோ அல்லது இரண்டு வருடமோ புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று. எனவே அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16