எனக்கு சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்திருந்தால் இலங்கை பொலிஸ் இவ்வளவு குழப்பத்திற்குள் தள்ளப்பட்டிருக்காது என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் பாதளஉலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நான் சுட்டிக்காட்டிய போதிலும் அதனை எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்க மட்டத்தில் நான் தெரிவித்த விடயங்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பொலிஸார் மத்தியில் ஒழுக்கமின்மை அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய குழப்ப நிலைக்கு பொலிஸ் மா அதிபரை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களும் தற்போதைய குழப்ப நிலைக்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தகுதியற்றவர் என யாராவது தெரிவித்தால் அதற்கான பொறுப்பை தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்கவேண்டும் அவர்களே இந்த நியமனத்தி;ற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM