அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு கடன்பொறியில்லை என தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு சீனா இராணுவ நோக்கங்களிற்காக துறைமுகத்தை பயன்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை கடன்பொறிக்குள் சிக்கவைப்பதற்காகவே சீனா நிதியுதவி செய்தது என யாராவது தெரிவிப்பார்கள் என்றால் அது தவறான விடயம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு இலங்கை சிரமப்பட்டது உண்மை என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கை துறைமுகத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சீனா உதவியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகத்தை தங்களிடம் கையளிக்குமாறு சீனா அரசாங்கம் எங்களை ஒரு போதும் கேட்கவில்லை இலங்கையே அவ்வாறான யோசனையை முன்வைத்தது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து இது பொருளாதார ரீதியான முயற்சியே என சீனாவிற்கு தெரிவித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் எவரையும் தலையிட அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தினதும் இந்து சமுத்திரத்தினது பாதுகாப்பும் இலங்கை படையினரிற்கு முக்கியமான விடயம் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM