அம்பலாந்தோட்டை– வலவ்வத்த, மாமடல பிரதேசத்தில் கடந்த 2ஆம் திகதி 17 வயது யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வீட்டிற்கு வந்த அறுவர் அடங்கிய குழு துப்பாக்கி மற்றும் பல ஆயதங்களை காட்டி தமது மகளை கடத்திச் சென்றதாக குறித்த யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடாத்திய பொலிஸாருக்கு குறித்த யுவதியை கடத்தியது யுவதியின் காதலரும் அவரதும் நண்பர்களும் என தெரிய வந்துள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திஸ்ஸமஹாராம – வீரவில பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து குறித்த யுவதியையும், காதலரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இருவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலிருந்து,
குறித்த யுவதி பல வருடங்களாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலிற்கு யுவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் தமது காதலிற்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் தனது காதலருடன் வீட்டை விட்டு ஓடுவதற்கு யுவதி காதலருடன் இனைந்து திட்டம் தீட்டியுள்ளார்.
திட்டத்திற்கமைய சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு வெளியேற யுவதி கதவை திறக்க முயற்சித்த வேளையில் பெற்றோர் தடுத்துள்ளனர்.
அவ் வேளையில் யுவதியின் காதலன் வீட்டு கதவை உடைக்க முயற்சித்த வேளையில் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளது. என பொலிஸாரின் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
யுவதியை கடத்திச் சென்ற இளைஞனுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் யுவதியை வைத்திய பரிசோதனைக்கு உடபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதி கடத்தல் சம்பவத்தில் காதலனின் நண்பர்கள் இன்றைய நாளுக்;குள் பொலிஸில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM