ஹம்பாந்தோட்டை - குடகோடா பகுதியில் இன்று மாலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தாயும் மனும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
சூரியபொகுன கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முச்சக்கரவண்டியானது கார் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போதே எதிரே வந்த டிப்பர் வண்டியுடன் மோதியுள்ளது.
முச்சக்கரவண்டி டிப்பர் வண்டியுடன் மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டியினுள் இருந்த பெண் கீழே விழுந்தள்ளார்.
கீழே விழுந்த பெண்ணின் மீது டிப்பர் சில்லு ஏறியதாலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
விபத்தை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் டிப்பர் வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM