இலங்கை கிரிக்கெட் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஐ.சி.சி. தெரிவித்தது என்ன?

Published By: Vishnu

03 Oct, 2018 | 12:08 PM
image

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நெருக்கடி நிலையில் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை தன்னிடம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி முயற்சி குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதவாது இங்கிலாந்துடனான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு செலுத்தப்படவிருந்த தொகையை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்குக்கு பதிலாக தனிப்பட்ட கணக்கொன்றுக்கு மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சி குறித்து தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியே அமைச்சர் பைஸர் முஸ்தபா பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு நிதிமோசடி செய்யப்படவிருந்த பணத் தொகை 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09