(ஆர்.யசி)
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் எட்டு தமிழ் அரசியல் கைதிகளில் இருவரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி சாதகமான நகர்வுகளை முன்னெடுக்கவும் முடியும் என தெரிவித்துள்ள அரசாங்கம் ஏனைய மூவரையும் விடுவிக்க முடியாதென கூறியுள்ளது.
இதேவேளை தண்டனை பெறப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாளை புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இலங்கையில் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ. சுமந்திரன் எம்.பி நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள மற்றும் சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM