மாணவனை பிரிய மறுக்கும் ஆசிரியை : பிரித்தால் தற்கொலை

Published By: Priyatharshan

14 Mar, 2016 | 11:20 AM
image

நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள், பணத்தின் மூலம் எங்களைப் பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என ஆசிரியை கோதை தெரிவித்துள்ளார். 

தென்காசி அருகே கடந்தாண்டு மாயமானதாக தேடப்பட்டு வந்த மாணவனையும் ஆசிரியையும் திருப்பூரில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், அவர்களை கடையநல்லூர்  பொலிஸார்  தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையின் போது ஆசிரியை கோதைலட்சுமி பொலிஸாரிடம் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆசிரியை மேலும் தெரிவிக்கையில்,

‘நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் உண்மையாக காதலித்தோம். சேர்ந்து வாழ ஆசைப்பட்டோம். 

ஆனால் எங்கள் காதலை யாரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் புதுச்சேரி சென்று அங்கு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். 

அதுவரை எங்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு இருந்ததில்லை. திருமணத்திற்கு பின்பு தான் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். 

இப்போது நான் 4 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எங்களை நிம்மதியாக சேர்ந்து வாழ விடுங்கள். சட்டத்தின் மூலம் எங்களை பிரித்தாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து வாழ்வோம். 

பணத்தின் மூலம் எங்களை பிரிக்க நினைத்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆசிரியை கோதைலட்சுமி மற்றும் மாணவன் இருவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

அதையடுத்து அவர்களை தொன்காசி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, அவர்களை 15 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்திலுள்ள மகளிர் சிறையிலும் மாணவன் நெல்லை கூர்நோக்கு இல்லத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு : http://www.virakesari.lk/article/4082

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46