19 வருடங்களிற்கு முன்னர் தென்கொரியாவில் பெண்ணொருவர் கூட்டாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் எல்லைக்கு வெளியே சிஐடியினர் மேற்கொள்ளும் முதலாவது விசாரணையிதுவென பொலிஸ் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
1998 இ;ல் வீதிவிபத்தொன்றில் தென்கொரிய பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.
எனினும் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது அந்த பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டமை தெரியவந்தது.
குறிப்பிட்ட பெண்ணி;ன் ஆடைகள் மூலம் அதிகாரிகள் மரபணு மாதிரிகளை பெற்றிருந்தனர்.
இதன் பின்னர் 2010 இல் சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியதாக இலங்கை பிரஜையொருவர் தென்கொரியாவில் குற்றம்சாட்டப்பட்டார்.
அவருடைய மரபணு மாதிரிகளை ஆராய்ந்தவேளை அது 1998 இல் விபத்தில் இறந்த பெண்ணின் ஆடையில் காணப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவது தெரியவந்தது.
இதன் பின்னர் தென்கொரிய விடுத்த அழைப்பை ஏற்று அந்த நாட்டிற்கு சென்ற சிஐடியினர் சம்பவம் இடம்பெற்ற இடத்தை பார்வையிட்டனர்.
இதன் பின்னர் இந்த வருடம் இலங்கை வந்திருந்த கொரிய அதிகாரிகள் குழுவொன்று 1998 சம்பவம் குறித்து ஆராய்ந்தது.
இது குறித்த விபரங்களை சிஐடியினர் நீதிமன்றில் இன்று சமர்ப்பித்துள்ளனர்
இதனை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் சிஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM