(இரோஷா வேலு)
கொழும்பு தொட்டலங்க பொது சந்தைக்கருகில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சூட்டியா என்பவர் இன்று போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தின் போது தொட்டலங்க நாகலகம் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய கயான் சம்பத் எனப்படும் சூட்டியா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் தொட்டலங்க பொது சந்தைக்கருகில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 105 கிராம், 480 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்து இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் அவரை தடுப்பு காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM