இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கு நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையை யும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம். வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார்.
இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்குமான அனுசரணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறுவனம்
வழங்குகிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தின்போது மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வனுசரணை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்கான இவ்வனுசரணையை வழங்குவதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். அதேவேளை லசித் மலிங்கவின் பந்துவீச்சை மைதானத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
சம்பியனாகும் அணிகளுக்கே நீங்கள் அனுசரணையாளராக இருக்கிறீர்களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் அணிக்குமான அனுசரணையை இந்திய நிறுவனமான கொன்விடன்ட் குரூப் நிறுவனம்
வழங்குகிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ணத்தின்போது மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கும் இந்நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வனுசரணை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய கொன்விடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் டாக்டர். ரோய், இலங்கை அணிக்கான இவ்வனுசரணையை வழங்குவதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். அதேவேளை லசித் மலிங்கவின் பந்துவீச்சை மைதானத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன். இப்போது அவரு டன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
சம்பியனாகும் அணிகளுக்கே நீங்கள் அனுசரணையாளராக இருக்கிறீர்களே ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் ரோய், எனக்கு எப்போதும் சிறந்ததுதான் வேண்டும். அதனால்தான் நடப்பு சம்பியனான இலங்கைக்கு எமது அனுசரணையை வழங்குகிறோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM