அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று வவுனியாவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பன்டாரவன்னியனின் சிலைக்கருகில் இடம்பெற்றுவரும் இச் சத்தியாக்கிரக போராட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சத்தியாக்கிரக போராட்டமானது அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதுலை செய் என்ற கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி, தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கு. திலீபன் மற்றும் அக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள், வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன், உப தலைவர் சு. குமாரசாமி மற்றும் உறுப்பினர்கள், மாக்ஸிஸ லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்கள், சிறிடெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM