வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவினை கடத்த முற்பட்ட 26 வயதுடைய யுவதியொருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா ஒயார்சின்னக்குளத்தினை சேர்ந்த 26 வயதுடைய யுவதி கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்.
அங்கிருந்து வவுனியாவிற்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கேரளா கஞ்சாவுடன் மீண்டும் கொழும்பினை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்படவிருந்த சமயத்தில் குருமன்காடு பகுதியில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதியிடமிருந்து ஒரு கிலோ 620 கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னினையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM