இறுதி யுத்தத்தின்போது நானோ முன்னாள் ஜனாதிபதியோ நாட்டை விட்டு தப்பியோடவில்லை- பொன்சேகா

Published By: Rajeeban

29 Sep, 2018 | 11:27 AM
image

இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ  கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச இராணுவ தளபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர் என ஜனாதிபதி சிறிசேன நியுயோக்கில் தெரிவித்துள்ள கருத்து குறித்து பதில் அளிக்கையிலேயே சரத்பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளை கவனம் செலுத்தவேண்டிய பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் அதிகாரிகளின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி யுத்தத்தின் இறுதிவாரங்களில் நாட்டை விட்டு வெளியேறினார் நான் சீனாவிற்கு சென்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை இரண்டு வாரங்களில் தீர்மானித்து விட முடியாது  இறுதி இரண்டு வாரங்களில்  மேற்கொள்ள வேண்டியிருந்த தாக்குதல்களை சாதாரண சிப்பாயால் கூட செய்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02