தமிழர்கள் பிரிந்து நிற்பதனால் தான் துன்பங்கள் துயரங்களை அனுபவிக்கிறார்கள்- இராதாகிருஸ்ணன்.

Published By: Daya

28 Sep, 2018 | 04:07 PM
image

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன என தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

வடமாகாணசபை நல்லபடியாக செயற்பட்டு வருகிறது அதன் செயற்பாடு எதிர் காலத்தில் அதிகரிக்கப்பட வேண்டும். 

அடுத்த தேர்தல் வரும்போது எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வடமாகாணத்தின் ஆளுமையை கட்டியெழுப்பக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். 

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் வருகின்றன எனத் தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.

கரவெட்டி ஸ்ரீநாரதா வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் அதன் அதிபர் ச.சுபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;

நகரத்தை நோக்கி பாச்சல் கொடுக்கிற காலத்திலே கிராமப் புற பாடசாலைகள் முன்னேறுவது என்பது சற்று சிரமமான காரியம். 

பாடசாலைகளில் எதிர் வரும் காலங்களில் மாணவர்களின் தொகையை அதிகரிக்க வேண்டும். 

முன்பு ஒரு குடும்பத்தில் 8 , 10 பிள்ளைகள் இருப்பார்கள் ஆனால் இப்போது 2 பிள்ளைகளுடன் சிறிய, நல்ல குடும்பம் என இருக்கிறார்கள்.

பாடசாலைகளில் மாணவர்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாது போனால் பல பாடசாலைகளை மூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். அதற்கான திட்டங்கள் செயற்பட வேண்டும். 

தமிழர்கள் பிரிந்து நிற்பதனால்தான் துன்பங்கள், துயரங்கள் அதிகமாக வருகின்றன.

அதனாலே 13 ஆவது திருத்தச் சட்டத்தை விஷேடமாக வடமாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

வடமாகாணசபை இன்னும் 3 , 4 மாதங்களில் தேர்தலை நோக்கி பயணிக்கவுள்ளது.

அப்போது இங்குள்ள தமிழர்கள் உறுதியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நல்லமுறையில் இயக்கக் கூடிய, இயக்கிக் கொண்டிருக்கிற மாகாண சபையை இன்னும் மென்மேலும் வளர்ச்சிப் பாதையிலே செல்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

வடமாகாண கல்வி அமைச்சர் கே. சர்வேஸ்வரன் தனது காலத்தில் நல்ல முயற்சிகளை செய்துள்ளார்.

அவரின் பணி எதிர் காலத்திலும் தொடர வேண்டும் எனத்தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08