திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், 23 இலட்சத்து 54 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர், நேற்று இரவு தம்பலகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, ஹினிதும மற்றும் அக்குரணை பகுதியைச் சேர்ந்த 22, 24, 52 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கி பஸ்ஸில் வருகை தந்து தம்புள்ளையில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்றுக்கொண்டு திருகோணமலை பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து காரை சோதனையிட்டபோது 5000 ரூபாய் பணம் 469 சட்டவிரோத நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ம் கட்டை பகுதியிலேயே தம்பலகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் பண்டார தலைமையிலான குழுவினர் சோதனையிட்டதாகவும் தெரியவருகின்றது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் இன்று கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM