(நா.தனுஜா)
இலங்கைப் பத்திரிகை சபையினைக் கலைப்பதற்கு அழைப்புவிடுத்த இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன், பத்திரிகை சபை முறையற்ற சட்டங்களின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார். அத்தோடு பத்திரிகைச் சபை சட்டத்தை நீக்குமாறும் பிரதமரிடம் கோரிக்கையும் விடுத்தார்.
ஊடக சுதந்திரமும், சமூகப் பொறுப்புணர்வும் பற்றிய கொழும்புப் பிரகடனத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தியனை முன்னிட்டு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைப் பத்திரிகை சபை முறையற்ற சட்டங்களின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைச் சபை சட்டம் நீக்கப்பட வேண்டும். பிரதமர் ஒரு சட்டத்தரணி எனும் அடிப்படையில் இச்சட்டம் முன்மொழியப்பட்ட போது அதற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மேலும் சுதந்திரமான ஊடகத்துறை காணப்படுமாயின் சிறந்ததொரு அரசாங்கத்தை கட்டமைக்க முடியும் என்பதுடன், ஜனநாயத்தையும் நிலைநாட்ட முடியும்.
தற்போது ஏற்பட்டுள்ள செலவீனங்களின் அதிகரிப்பிற்கு அமைவான பத்திரிகை அச்சிடல் கட்டணமும் அதிகரித்துள்ளது. அதனைக் குறைப்பதன் மூலம் பத்திரிகைத்துறை நிலைத்திருப்பதற்கு பங்களிப்புச் செய்யுமாறு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM