சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் பி-52 ரக குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்கா பறக்க விட்ட சம்பவத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியின் சர்வதேச வான் எல்லையில் ஜப்பானுடன் இணைந்து பி-52 ரக குண்டு வீச்சு விமானங்களை பயன்படுத்தி கூட்டு போர் விமானப் பயிற்சியை மேற்கொண்டதாக கடந்த புதன் கிழமை அமெரிக்கா அறிவித்திருந்தது.
இது குறித்து சீன பாதுகாப்பத்துறை செய்தித் தொடர்பாளர் ரென் குவோகியாங்
“பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்களை பறக்கச் செய்வதை நாங்கள் எதிர்த்து வருகிறோம்” என்றார்
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளை நீண்டகாலமாக சீனா உரிமைக் கோரி வருகிறது. குறிப்பாக தென் சீனக் கடல் பகுதியை சீனா எங்களுடையது என உரிமை கோரி வருகிறது.
குறித்த பகுதியை வியட்நாம் பிலிப்பைன்ஸ் மலேசியா புரூணே மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் உரிமை கோரி வருகின்றன.
தென் சீனக்கடல் எரிசக்தி வளங்கள் மீன்வளம் மற்றும் முக்கிய கடல் வழிப் பாதையாக திகழ்கிறது. இதனாலேயே தென் சீனக் கடலில் இராணுவ நிலைகளை நிறுவக் கூடிய அளவிற்கு செயற்கைத் தீவகளை உருவாக்கி அப் பகுதிக்கு சீனா முழு உரிமை கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
எனினும் தென் சீனக் கடல் சர்வதேச பகுதி எனவும் அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM