பாக்கிஸ்தான் அணியின் மோசமான துடுப்பாட்டமே ஆசிய கிண்ணத்தொடரில் அணி தோல்விகளை சந்தித்தமைக்கான காரணம் என அணியின் தலைவர் சப்ராஸ் அகமட் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸ் உடனான போட்டியில் தோல்வியடைந்து அணி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்த பின்னர் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு அணியாக நாங்கள் சிறந்த முறையில் உணரவில்லை ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வீரர் என்ற வகையில் நானும் சிறப்பாக விளையாடவில்லை நானும் சிறப்பாக விளையாடியிருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போட்டியின் அனைத்து அம்சங்களிலும்; நாங்கள் மோசமாக விளையாடினோம்,இந்த தொடரில் பல தடவைகள் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்காரே எங்கள் முக்கிய துடுப்பாட்ட வீரர் அவர் சிறப்பாக விளையாடவில்லை,சடாப் காயத்தினால் பாதிக்கப்ட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சிறந்த அணிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால் சிறப்பாக விளையாடவேண்டும், எங்கள் மோசமான துடுப்பாட்டமே தொடரில் எங்கள் தோல்விகளிற்கு காரணம் எனவும் சப்ராஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாக்கிஸ்தானுடான வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பங்களாதேஸ் அணியின் தலைவர் மஸ்ரபி மோர்ட்டாசா அணியின் களத்தடுப்பு குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
மிகநீண்டகாலமாக நாங்கள் இவ்வாறு சிறப்பாக களத்தடுப்பில் ஈடுபடவில்லை எதிர்காலத்திலும் இவ்வாறே களத்தடுப்பில் ஈடுபடுவோம் என எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் இன்னமும் முன்னேற்றம் காணவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM