அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதமை மற்றும் கால தாமதங்கள் குறித்து நான் உடனடியாக கவனம் செலுத்துகின்றேன் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விவகாரம் குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கின்றேன்.
யுத்த காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்போதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்கள் பாரிய குற்றங்களின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள். அவர்களை விடுதலை செய்வது கடினமானது எனவும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி.யிடம் இருந்த அரசியல் கைதிகளின் விபரங்களையும் அவர் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM