ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சிகளை, சகல அரசாங்கப் பாடசாலைகளிலும், இவ்வாண்டுக்குரிய தொனிப் பொருளில் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
"தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக நமது சிறார்களைப் பலப்படுத்துவோம்" என்பதே, இவ்வாண்டுக்கான உலக சிறுவர் தினத்தின் தொனிப்பொருளாகும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள இத்தொனிப் பொருளிலேயே, சிறுவர் தின நிகழ்வுகள் நடத்தப்படல் வேண்டும் என, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
சகல மாகாணங்களிலுமுள்ள கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பிலான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM