சம்பரகமுவ மாகாணத்தில் பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு (Belihul-Oya to World’s end ) காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் சேவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிக கவர்ந்த இடமாகும். இந்நிலையில் இப்பகுதியில் கேபிள் கார் சேவை அமைக்க டுபாய் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
இந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை சம்பரகமுவ பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளோம்.
இதன் மூலம் குறித்தப் பகுதியில் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடியதாகவும், சிவனொளிபாத மலை தவிர்ந்த ஏனைய மலைப்பகுதிகளில் எங்கு வேண்டுமென்றாலும் கேபிள் கார் சேவையை செயற்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM