நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக ஹட்டனில் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் இன்று ஹட்டன் ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு பரவும் சூழலினை தடுக்கும் பேரணியூடனான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணி ஹட்டன் கொமர்ஷல் வங்கிக்கு முன்னாள் ஆரம்பமாகி ஹட்டன் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றுள்ளனர்.
இதன் போது கழிவு பொருட்களை மீள் சுழற்சி செய்து எவ்வாறு சுற்றுப்புற சூழலை அழகுபடுத்தலாம் என்பது தொடர்பாக செயல்முறை செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவு பொருட்களையும் அகற்றியுள்ளனர்.
அத்துடன் ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.பாலகிருஸ்ணன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஹட்டன் டிக்கோயா நகர சபை அதிகாரிகள் மற்றும் அம்பகமுவ பிரதேச சபை அதிகாரிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM