இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் புயலில் சிக்கி படகுடன் அடித்து செல்லப்பட்ட மீனவர் ஒருவர் 49 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். .
இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்த 19 வயதான ஆல்டிநோவல் அடிலாங் என்பவர் படகில் இருந்தபடி மீன்களை பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடம் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி செல்கின்றன.
கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் புயல் தாக்கியது. அதில் அவரது படகு அடித்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கடலில் தொடர்ந்து தனியாக பயணம் செய்து கொண்டே இருந்தார்.
49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையை சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்றன. அவர்களிடம் உதவி கோரினார். யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.
49 நாட்களுக்கு பிறகு பனாமா நாட்டு கப்பலுக்கு “ரேடியோ சிக்னல்“ மூலம் தகவல் வழங்கி தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தினார். இதனையடுத்து அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்து சென்றனர். அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றார்.
கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களை பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாக கூறினார்.
கடல் நீரை துணியால் வடிகட்டி சிறிது உப்பை அகற்றி தண்ணீர் குடித்ததாகவும் கூறினார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM