அற்புதங்கள் நடைபெறுவதற்கான சான்றே குழந்தைகள். மகிழ்ச்சியின் குவியலான இந்த அற்புதத்தை அடையவே எல்லா தம்பதியினரும் விரும்புகின்றனர். ஆனால் சில வேளைகளில் தம்பதியினரின் இந்த கனவு நிறைவேறுவதில் சிரமம் ஏற்படுகிறது. தாய்மைப்பேறு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். இந்த மகப்பேற்றுச் சிக்கல்களை தீர்த்து அவர்களின் குழந்தைப் பேற்றுக் கனவை நிறைவேற்ற இன்று ஏராளமான நவீனமருத்துவ வசதிகள் வந்து விட்டன என்கிறார் டாக்டர் சாமுண்டி சங்கரி.
ஏ.ஆர்.டி.- ஓர் அறிமுகம்
அசிஸ்டட் ரீப்ரொடக்டீவ் டெக்னிக்ஸ் (ஏ.ஆர்.டி) என்ற கருவுறுதலுக்கு துணை செய்யும் தொழில்நுட்பங்கள் இயற்கையாய் கருவுற தடையாய் இருக்கும் சிக்கல்களுக்கான சிறந்த தீர்வாக இருக்கிறது. ஆணின் விந்தணுவையும் பெண் ணின் கருமுட்டையையும் பரிசோதனை கூடத்தில் கருவுறச்செய்து தரித்த கருவை பெண்ணின் கருப்பையில் பதித்து அங்கே இயற்கையாய் வளரச்செய்வதே இம்முறையாகும்.
ஏஆர்.டி. யில் 30 வருட கால ஆழ்ந்த அனுபவத்துடன் முன்னோடியாக திகழ்கிறார் டாக்டர் சாமுண்டி சங்கரி. சிருஷ்டியில் அவரவரின் தனித்தன்மைக்கேற்ப சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுவதால் ஐ.வி.எப். முறையில் 55 சதவீகிதத்திற்கும் மேல் கருவுறுவதில் வெற்றி கிடைக்கிறது. ஐ.வி.எப். முறையை மேலும் சிறப்பாக்க பல புதுமையான சிகிச்சை முறைகளையும் புகுத்தி டாக்டர் சங்கரியின் மேற்பார்வையில் குழந்தை பெற்றுக்.கொள்ளும் வாய்ப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளனர்.
யாருக்கு ஐ.வி.எப். தேவை?
ஐ.வி.எப். முறை, கருக்குழாய் அடைப்பு, ஆணின் மலட்டுதன்மை, கருப்பை சுவரின் தடிப்புப்படலம், சினைமுட்டை குறைபாடு, சினைப்பையின் செயல்திறன் குறைவு, 30வயதிற்கு மேற்பட்டு கருவுறுதல், தொடர் கருச்சிதைவு மற்றும் காரணம் அறிய முடியாத கருவுற முடியாமை போன்றவைகளுக்கு தேவைப்படுகிறது. கருத்தரிப்பதற்கு முன்பாக மரபணு பரிசோதனை செய்து பார்க்க விரும்பும் பெற்றோருக்கும் கருமுட்டை மற்றும் கருவை உறையச்செய்து பாதுகாத்து வைத்து பின்னர் குழந்தை பெற்று கொள்ள விரும்புபவர்களுக்கும் ஐ.வி.எப். முறை பயனுள்ளதாகும். ஒரு முழுமையான ஐ.வி.எப். சுழற்சி என்பது 3-4 வார கால சிகிச்சை முறையாகும்.
ஐ.சி.எஸ்.ஐ – ICSI
ஐ.வி.எப். போல ஐ.சி.எஸ்.ஐ. என்பதும் ஏ.ஆர்.டி. முறைகளில் ஒன்று ஆண் மலட்டுதன்மையோ ஐ.வி.எப். தொடர்ந்து தோல்வி அடைந்தாலோ இம்முறை உதவுகிறது. இம்முறையில் ஆண் தரமான ஒரே விந்தணுவை தேர்ந்தெடுத்து அதை பெண்ணின் கருமுட்டையில் ஊசி மூலம் செலுத்தி கருவுறச் செய்யப்படுகிறது. பிறகு கருவை பெண்ணின் கருப்பையில் பதித்து வளரச்செய்யும் முறையே ஐ.சி.எஸ்.ஐ. முறை.
க்ரீன் ஐ.வி.எப். -Green IVF
ஐ.வி.எப். முறையை விட க்ரீன் ஐ.வி.எப். முறையில் பல நன்மைகள் உண்டு அதில் குறிப்பாக ஒவேரியன் ஹைபர் -ஸ்டிமுலேஷன் சின்ட்ரோம் கொனடோட்ராபின் ஊசி இல்லாமை அல்லது குறைவாக உாயோகப்படுத்தப்படுவது. அதிகமான கரு உருவாகாமல் தடுப்பது அதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பம் தரிக்காமல் காப்பது போன்ற நன்மைகள் அடங்கும். இம்முறை அதிகமாக ஊக்கப்படுத்தப்படும். பிரச்சினை உள்ள பெண்களுக்கு முப்பது வயதிற்கு குறைவான பெண்களுக்கு பொருத்தமானது. இம்முறையை ஆண் மலட்டுத்தன்மை பிரச்சினை உள்ள தம்பதியருக்கே பரிந்துரைக்கப்படுகிறது.
ஐ.யு.ஐ. -IUI
பழைமையான இந்த கருத்தரிப்பு முறை 18 ஆம் நூற்றாண்டில் இறுதியிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் முறை. ஆணின் விந்தணுவை எடுத்து நேரடியாக பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படும். இம்முறையில் இன்று விந்தணுவை நன்கு சுத்தப்படுத்தி துடிப்பான தரமான விந்தணுவை தேர்ந்தெடுத்து செலுத்த முடிவதால் அதிக வெற்றி வாய்ப்பை தருகிறது. இதன் மூலம் அதிகமான எண்ணிக்கையில் தரமான விந்தணுக்களை செலுத்துவதால் கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. இம்முறை ஐ.வி.எப். முறையை விட சுலபமானதும் செலவு குறைவானதும் குறைவான நேரம் தேவைபடுவதும் ஆகும்.
இந்த முறை காரணம் அறிய முடியாத மலட்டுத்தன்மை, ஆண் மலட்டுத்தன்மை மிதமாக இருப்பது, விந்து வெளிப்படுவதில் சிக்கல், இருப்பது கருப்பை வாய் பகுதியில் திரவகசிவு இருப்பது, கருப்பை வாய் திசுக்களில் வடுக்கள் இருப்பது மற்றும் கருப்பை சுவர் தடிப்பு படலம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. 35 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கே இம்முறை வெற்றியளிப்பதுடன் சராசரியாக இம்முறையில் ஒரு சுழற்சியில் 10--20 சதவீத வெற்றி கிடைக்கிறது.
லேசர் அசிஸ்டட் ஹேட்சிங்
-Laser Assisted Hatching
சில பெண்களுக்கு கரு முட்டையின் ஓடு (ஜோனா பெலுசிடா) தடித்து இருக்கும் இதனால் தரித்த கருவை ஐ.வி.எப். போன்ற முறைகளில் கருப்பையில் செலுத்திய பிறகு கரு முட்டையிலிருந்து வெளிவந்து சுவற்றில் பதிவது இல்லை. எனவே முட்டையில் ஓட்டை உடைந்து விடும் தொழில்நுட்பம் மூலம் இப்பிரச்சினையை சரி செய்ய முடிகிறது. இதுவே லேசர் அசிஸ்டட் ஹேட்சிங் இதை வயது முதிர்ந்த தாய் கருவின் தரம் குறைந்திருத்தல் பாலிக்கல் ஸ்டிமுலேஷன் சின்ட்ரோம் என்ற பிரச்சினை உள்ள பெண்கள் போன்றோருக்கு செய்யப் படுகிறது.
ப்ரீ- ஜெனடிக் இன்ப்ளான்டேஷன் டயாக்னாஸ்டிக்- PGD
கருப்பையில் தரித்த கருவை செலுத்தவதற்கு முன்பாக மரபணு பரிசோதனை செய்ய முடிவதால் மரபியல் நோய்கள் தடுக்கப்படுவதற்கும் கருச்சிதைவு ஏற்படுவதை தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது. மரபியல் பிரச்சினை இருக்கும் பெற்றோருக்கும் இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இலங்கை: 0772646800
இந்தியா: 00918508501111
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM