அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே மோதல் அதிகரித்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அடாவடிப் போக்கே காரணம் என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையில் பனிப்போர் தொடர்ந்து நடந்து வந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் மோதல் அதிகரித்துள்ளது.
சீனா ரஷ்யாவுடன் நட்புறவை அதிகரித்தமையே இம் மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
சீனாவின் வர்த்தக ரீதியான அணுகு முறை தவறாக இருப்பதாக் கூறி 267 பில்லியன் டொலர் அளவிற்கு பொருளாதாரத் தடை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
அதன் ஆரம்பகட்டமாக 34 பில்லியன் டொலர் மதிப்பிலான சீனப் பொருட்களின் மீது 10சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 60 பில்லியன் டொலர் அளவிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வரி விதிக்க சீனா முடிவெடுத்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையிலான பொருளாதார போர் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி சீனா சீன மொழியில் 36000 எழுத்துக்களில் 6 பகுதிகளாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில்,
உலகின் வளரும் நாடுகளில் சீனா மிகப் பெரியது என்றும் உலகின்ன மிகப் பெரிய வளர்ந்த நாடு அமெரிக்கா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு அமெரிக்கா சீனாவிற்கு மட்டுமன்றி உலக பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் உறவுகளை சீர்படுத்த பல ஆண்டுகளாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவை முன்னிறுத்தி ட்ரம்ப் செயல்படத் தொடங்கியதும் இரு தரப்பு சுமூக உறவை மீறும் வகையில் நடந்ததுமே கருத்து வேறுபாடுக்கு முக்கிய காரணம் என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான உறவை சுமூகமக தொடர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா அவற்றை புறந்தள்ளி மோதல் போக்கை தொடர்வதாகவும் சீனா குற்றஞ் சாட்டி இரு அரசுகளும் இரு நாட்டு மக்களும் காலம் காலமாக வளர்த்து வந்த உறவை ட்ரம்பின் நடவடிக்கைகள் சிதைத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி இரு வேறு கட்டங்களில் இருப்பதால் மோதல் ஏற்படுவது இயற்கை என்றும் அவற்றை சரி செய்ய இரு தரப்பு நம்பிக்கை ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம் என்றும் சீனா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM