குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணம் அரசாங்கத்தின் பிளவு - மஹிந்த

Published By: Daya

25 Sep, 2018 | 12:09 PM
image

அரசாங்கம் பிளவடைந்து காணப்படுகின்றது. இதனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. வடக்கில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் இரண்டாக பிளவடைந்துள்ளமையால் நாட்டில் அரங்கேறுகின்ற முக்கிய பிரச்சினைகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. ஒழுக்கமற்ற குழப்பமான சமூதாயத்தையே அரசாங்கத்தால் தோற்றுவிக்க முடிந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் குற்றச்செயல்கள் பதிவாகின்றன. போதைப்பொருள் சுழற்சி அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளைகள் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன. ஒழுங்கு இல்லாத குழப்பமான சமூகத்திலேயே தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வடக்கிற்கு தனியான சட்டமும் தெற்கில் தனி சட்டமும் காணப்படுகின்றது. வடக்கில் காணப்படும் ஆவா குழுவை கட்டுப்படுத்த அனுமதி கோர வேண்டிய நிலை ஏற்படுட்டுள்ளது. இதுவே தெற்கில் இவ்வாறான அனுமதிகளை பெறவேண்டிய தேவையில்லை. 

எனவே தற்போதைய சமூகத்தில் தமது பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோர் மிக விழிப்புடன் செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01