பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான சினைப்பர் ரக துப்பாக்கி காணாமல்போயுள்ளமை பாரதூரமான விடயம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சினைப்பர் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் காணாமல்போனால் அது பாரிய கவலையை ஏற்படுத்தக்கூடிய விடயம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காணாமல்போன துப்பாக்கியை யார் யாருக்கு எதிராக பயன்படுத்தப்போகின்றார்கள் என எவருக்கும் தெரியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன என வெளியாகியுள்ள செய்திகளை கருத்தில் கொள்ளும் போது சினைப்பர் துப்பாக்கி காணாமல்போயுள்ளமை ஆபத்தான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி முக்கிய நபர்களை கொலை செய்வதற்கான சதி இடம்பெற்றமைக்கான ஆதராங்கள் உள்ளபோதிலும் ஏன் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க டொலரின் அதிகரிப்பினால் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது உருவாகியுள்ள அழுத்தங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகத்தினர் தென் பகுதியில் மாத்திரம் செயற்படவில்லை நாடு முழுவதிலும் அவர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM