ரூபாவின் வீழ்ச்சியைக் காட்டி அரசுக்கு எதிராக மக்களை திசைதிருப்பும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி - எரான் விக்ரமரத்ன

Published By: Digital Desk 4

24 Sep, 2018 | 03:57 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதால் நாட்டின் கடன் வீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கிலே இவ்வாறு தெரிவிக்கின்றனர். 

அத்துடன் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகுக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்சினையாகும் என நிதி மற்றும் ஊடக ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

வரலாற்றில் எப்போதும் இல்லாதளவு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதால் நாட்டின் பொருளாதாரம் நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அதனால் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன்தொகையை இரட்டிப்பாக வழங்கவேண்டியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துவரும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் வீதமும் இரட்டிப்பாக அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை.  

ஏனெனில் ரூபாவில் கடன் பெற்றால் அதனை ரூபாவிலே வழங்கவேண்டும். அதேபோன்று டொலரில் வெளிநாட்டு கடன் பெற்றிருந்தால் அதனை டொலரிலேயே வழங்கவேண்டும். டொலரை ரூபாவுக்கு மாற்றியமைத்தே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் கூட்டு எதிர்க்கட்சியினர் மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கத்திலே இவ்வாறு பிரசாரம் செய்துவருகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58