(எம்.ஆர்.எம்.வஸீம்)
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதால் நாட்டின் கடன் வீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கிலே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
அத்துடன் டொலரின் பெறுமதி அதிகரித்திருப்பது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகுக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்சினையாகும் என நிதி மற்றும் ஊடக ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
வரலாற்றில் எப்போதும் இல்லாதளவு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதால் நாட்டின் பொருளாதாரம் நாளுக்குநாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அதனால் வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடன்தொகையை இரட்டிப்பாக வழங்கவேண்டியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துவரும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் வீதமும் இரட்டிப்பாக அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை.
ஏனெனில் ரூபாவில் கடன் பெற்றால் அதனை ரூபாவிலே வழங்கவேண்டும். அதேபோன்று டொலரில் வெளிநாட்டு கடன் பெற்றிருந்தால் அதனை டொலரிலேயே வழங்கவேண்டும். டொலரை ரூபாவுக்கு மாற்றியமைத்தே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
அதில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் கூட்டு எதிர்க்கட்சியினர் மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பும் நோக்கத்திலே இவ்வாறு பிரசாரம் செய்துவருகின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM