இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று

Published By: Vishnu

24 Sep, 2018 | 01:14 PM
image

(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற  நிலையில்  இலங்கை விவ­காரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை  "பசு­மைத்­தா­யகம்" அமைப்­பினால்    உப­கு­ழுக்­ கூட்டம்  ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இலங்கை மனித உரிமை தொடர்­பான இந்த உப­கு­ழுக்­ கூட்டம் மனித உரி­மைப்­பே­ரவை வளா­கத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணி­யி­லி­ருந்து  3 மணி­வரை  நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த உப­கு­ழுக்­ கூட்­டங்­களில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நிதிகள், தமிழ் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள்,  சர்­வ­தேச நாடு­களின்   பிர­தி­நி­திகள், சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பினர் கலந்­து­கொண்டு  இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் என்ற விட­யத்தை   வலி­யு­றுத்­த­வுள்­ளனர். 

அத்­துடன் தென்­னி­லங்­கையிலிருந்து கலந்­து­கொள்­ள­வுள்ள அமைப்­புக்கள்   ஜெனிவா பிரே­ர­ணைக்கு எதி­ராக   அக்­க­ருத்­துக்­களை முன்­வைக்­க­வுள்­ளன.    ஜெனிவா நோக்கி பய­ணித்­துள்ள  முன்னாள் பிர­தி­ய­மைச்சர் சரத் வீர­சே­கர  இக் கூட்­டத்தில் பங்­கேற்று இலங்கை குறித்த  ஜெனிவா பிரே­ர­ணைக்கு  எதி­ராக  உரை­யாற்­றவுள்ளார் என்று  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இதே­வேளை "தமிழ் உலகம்" என்ற அமைப்­பினால் நாளை 25 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்கை தொடர்­பான உப­கு­ழுக் கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

"இலங்­கையின் மனித உரிமை நிலைமை" என்ற தலைப்பில் மனித உரிமைப் பேர வையின் 15 ஆவது இலக்க அறையில் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை இந்த உபகுழுக் கூட்டம் நடத்தப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08