மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியின் இப்ராகிம் முகமது வெற்றிபெற்றதாக அறிவிப்பு

Published By: Priyatharshan

24 Sep, 2018 | 07:21 AM
image

மாலைதீவில் நேற்று இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 8 மணிக்கு மாலைதீவு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. இந்நிலையில் மாலை வாக்குப்பதிவு முடிந்த பின்னர் 92 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், மாலைதீவு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக வீதிகளில் மாலைதீவின் தேசிய கொடியை அசைத்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

எனினும், தேர்தல் முடிவு குறித்த உத்தியோகபூர்வமான அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பிறகு தான் அறிவிக்கப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யமுடியுமெனவும் அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் இந்த கால அவகாசம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என வெற்றி பெற்ற எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைதீவில் சமீப காலமாக அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.  

ஆனால் இந்த தீர்ப்பை தற்போதைய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகள் முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றனர்.

இந்த நிலையில் அங்கு நேற்றைய தினம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது.  இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல் கயூம், மாலைதீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். 

அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், மாலைதீவு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போடியிட்ட நிலையில் தற்போது வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 12:56:28
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06