ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இரவு நியுயோர்க் நகரில் உள்ள ஜோன் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நியுயோர்க் நகரில் ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலில் அமைச்சர் திலக் மாரப்பன, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை வரவேற்றனர்.
“ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் இணக்கமானதாக ஆக்குதல், அமைதியும், நேர்மையும் மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும் பகிர்ந்த பொறுப்புக்களும்” என்ற கருப்பொருளின் கீழ் ஐ. நா பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் நியுயோர்க் நகரில் உள்ள ஐ. நா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன் பிரதான கூட்டத்தொடர் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், கூட்டத்தொடரில் தனது விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு நாளை இடம்பெறுகின்றது. இம் மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டத்தொடரொன்றும் அனைத்து அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக இலங்கை தொடர்பில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய நிதியம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வும் ஜனாதிபதி இந்த விஜயத்தின்போது இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உலக தலைவர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடனும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM