தேயிலையின் விலை அதிகரித்துள்ளதனால் மக்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் எமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களை துரத்தியடித்து தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வளவு காலமும் மலையகத்தில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரிந்து செயற்பட்டோம். இந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்காக எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இதனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துக் கொண்டு கம்பனிகாரர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எனக்கும், அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது. காரணம் சட்ட சிக்கல் உள்ளது. இதனால் மக்களுக்கு முறையான சம்பளத்தை பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கவாதிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM