நியாயமான சம்பளம் கிடைக்காவிடின் பெருந்தோட்ட நிறுவனங்கள் துரத்தியடிக்கப்படும் -  திகாம்பரம் 

Published By: Digital Desk 4

23 Sep, 2018 | 04:16 PM
image

தேயிலையின் விலை அதிகரித்துள்ளதனால் மக்களை பெருந்தோட்ட நிறுவனங்கள் எமாற்ற முடியாது. அவ்வாறு ஏமாற்றினால் பெருந்தோட்ட நிறுவனங்களை துரத்தியடித்து தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று காலை ஏற்பாடு செய்த சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்க வேண்டும். இவ்வளவு காலமும் மலையகத்தில் எல்லா தொழிற்சங்கங்களும் பிரிந்து செயற்பட்டோம். இந்த மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்காக எல்லா தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாங்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இதனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்துக் கொண்டு கம்பனிகாரர்களிடம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எனக்கும், அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது. காரணம் சட்ட சிக்கல் உள்ளது. இதனால் மக்களுக்கு முறையான சம்பளத்தை பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கவாதிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51