களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் சமுர்த்தி முகாமையாளர் ஒருவரின் வீட்டிலிருந்து 35 பவுண் நகையும் மூவாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவையும் கருத்திற் கொள்ளாது வீட்டின் மேல் ஏறி ஒட்டை உடைத்து உட்புகுந்த தனியொருவரே குறித்த பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளையில் இடம்பெற்ற உறவினரின் மரண வீட்டிற்கு சென்றிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மதிலைக் கடந்து வீட்டிற்கு பின்புறமாக வந்த கொள்ளையர் நீர்த்தாங்கி பொருத்தப்பட்டிருந்த வழியால் வீட்டின் மேல் ஏறி ஓட்டினை உடைத்து உட்புகுந்துள்ளார். உட்புகுந்தவர் அறைக்குள் இருந்த அலுமாரியை உடைத்து அதற்குள் இருந்த நகை 35 பவுணையும் காசு மூவாயிரம் ரூபாயையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினர் மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM