சிவராஜ் ரவிசாந்தன்
''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு'' என்பது திருக்குறளாகும்.எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் உண்மையான பொருளைக் காண்பதே அறிவாகும் என்பது இதன் பொருளாகும். நாம் கேள்விப்படுகின்ற அல்லது நமக்கு கிடைக்கின்ற எந்த செய்தியையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளாது அதன் உண்மைத் தன்மை, நம்பகத் தன்மை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரேயே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்த குறள் எடுத்துக் காட்டுகின்றது.
ஏனெனில் நாம் கேள்விப்படும் அத்தனை விடயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்வதால் ஏற்படும் விபரீதம் பாரதூரமானது. இதற்கு சிறந்த உதாரணம் வடமேல் மாகாணத்தில் குளியாப்பிட்டி எனும் பிரதேசத்தில் எச்.ஐ.வி.தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை மனிதாபிமானத்துக்கு அப்பால் சென்று ஒரு ஊரே தண்டித்தமையாகும்.
இன்று உலக நாடுகளிடையே வியாபித்து காணப்படும் தொழில் நுட்ப வளர்ச்சின் கீழ் மனிதர்களை நோய்களானது ஆட்டிப் படைக்கின்றன. அந்தவகையில் எச்.ஐ.வி என குறிப்பிடப்படும் எயிட்ஸ் என்ற பாலியல் நோயின் தாக்கம் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் முழு உலகத்தினையும் தெளி
வுப்படுத்திவருகின்றது. எனினும் இந்த நோயி னால் பாதிக்கப்படும் ஒருவர் சமூகத்திலிருந்து முற்று முழுவதுமாக புறந்தள்ளப்படுகின்றார். இந்நோய்த்தாக்கத்துக்கு ஆளாகும் ஒரு குடும்பத்தில்தாய், தந்தை அல்லது குடும்ப அங்கத்தவர்களில் எவராவது பாதிக்கப்படும் தருணத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால சந்ததி
யினர் பாதிக்கப்படுவதோடு மறுபுறம் அவற் றின் உண்மைத்தன்மையினை அறியாது அவர்களை எமது சமூகம் பல்வேறு ரீதியில் புறந்தள்ளுகின்றது. இது வழமையாக உலக நாடுகள் உட்பட எமது நாட்டில்உண்மையான எயிட்ஸ் தொற்றுக்குள்ளான ஒருவருக்கும் அவ ரின் பரம்பரைக்கும் நேரும் கொடுமையான நிலைமையாகும்.
எனினும்எவ்வித எயிட்ஸ் தொற்றும் இல்லாத ஒருவரை எயிட்ஸ் உள்ளதாகக் கூறி ஒரு ஊரே ஒதுக்கி வைப்பதும் அவரை மனதளவில் காயப்படுத்துவதுமான செயல்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடூரமான துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.
தந்தி போல் வேகமாக செல்லும் வதந்தி என்று சொல்வார்கள். ஆம் அது உண்மைதான் போலும். வடமேல் மாகாணத்தின் குளியாப்பிட்டி பிரதேசத்திலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள அந்த கிராமத்தில் வசிக்கும் சிறுவனே ருத்ரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறு வயதுடைய இந்த சிறுவன் தனது எதிர்கால இலட்சியங்களின் மத்தியில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்திலேயே முழு நாடும் ஒரு கணம் எயிட்ஸ் பற்றி பேசத் தொடங்கியது.
ஆம்! காரணம் இருக்கின்றது. இந்த சிறுவனின் தந்தை கொடூர நோய் ஒன்றின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந் நிலையில் அந்த ஊரார் சிறுவனின் தந்தை எச்.ஐ.வி.தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக கதையளக்க ஆரம்பித்தனர். வாய்க்கு வாய் மாறிய கதையானது இறுதியில் சிறுவனின் தாய்க்கும் எச்.ஐ.வி. தொற்று உள்ளதாகவும் சிறுவனுக்கும் அந்த தொற்று தொற்றிக்கொண்டிருப்பதாகவும் கதைகள் ஊருக்குள் உலா வந்தன. அது தான் தந்தியை விட வேகமாக பரவிய அந்த வதந்தி.
இந் நிலையில் 6 வயதை அடைந்த சிறுவனை அவன் தாய் கல்வி செயற்பாடுகளுக்காக குளியாப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்சேர்க்க முயன்றுள்ளார். எனினும் ஊருக்குள் பரவிய எயிட்ஸ் வதந்தியால் அந்த பாடசாலை அச்சிறுவனை சேர்த்துக்கொள்ள மறுத்தது. இதனைத் தொடர்ந்து முயற்சியைக் கைவிடாத அச்சிறுவனின் தாய் போராட்டங்கள் பல நடத்தி ஒருவாறு ஒரு பாடசாலையில் அச்சிறுவனை சேர்த்தார்.
அந்தச் சிறுவனின் தந்தை எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பள்ளிக்கூடமும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பள்ளிக்கூடம் ஒன்று அவரை சேர்த்தமை ஆறுதல் அளித்தது.
எனினும் அந்த சிறுவனை பாடசாலையிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறும் பாடசாலை அதிபருக்கு அழுத்தங்களை பிரயோகித்து ஆர்ப்பாட்டங்களை அப்பிரதேச மக்கள் முன்னெடுக்க அதிலிருந்து தொடர்ந்து தலையிடி ஆரம்பித்தது.
இதனிடையே வலய கல்வி, கல்வி அமைச்சு உட்பட சுகாதார அமைச்சு ஒன்றிணைந்து சிறுவனுக்கும், தாய்க்கும் எச்.ஐ.வி பரிசோதனையினை முன்னெடுக்க அதில் கிடைக்கப்பெற்ற அறிக்கை மூலம் இருவருக்கும் எச்.ஐ.வி தொற்று இல்லை என ஊர்ஜிதமானது.
இவ்வாறான நிலையில் மீண்டும் தனது மகன் பாடசாலையில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராக முயற்சித்த தருணத்தில் மீண்டும் ஏனைய மாணவர்களின் பெற்றோரினால் கடும் எதிர்ப்புக்கள் எழுந்ததோடு தொடர்ச்சியாக அந்த கிராமத்தில் மேற்படி பிரச்சினையானது வலுவடைந்து சென்றது.
வடமேல் மாகாண கல்வி
அமைச்சின் தலையீடு
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக் ஷ கிராம மக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் சுகாதார அமைச்சுடன் இணைந்து எச்.ஐ.வி. தொற்று தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் முகமாகவும் சில செயற்றிட்டங்களை முன்னெடுத்தார்.
குறித்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று தொடர்பிலான சோதனைகள் செய்யப்பட்டதோடு இருவருக்கும் இதில் எவ்வித பாதிப்புக்களுமில்லை என சில விடயங்களை தெளி
வுப்படுத்திய போதும்அந்த கிராம மக்களின் கருத்துகளிலும் கோரிக்கைகளிலும் எவ்வித மாற்றத்தையும் காண முடியாமையின் காரணமாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் குறித்த மாணவன் பெற்றோரின் கடுமையான எதிர்ப்புகளின் மத்தியில் இப்பாடசாலையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் மனதளவில் பாதிக்கப்படுவதோடு இச்செயற்பாடு மேலும் சில பிரச்சினைகளுக்கு வித்திடும் என்ற காரணத்தினால் மாணவனை பாடசாலையிலிருந்து இடைநிறுத்தியதோடு பிறிதொரு பாடசாலையினை பெற்றுதருவதற்கும் தாயாரிடம் வாக்குறுதியளித்தார்.
விரக்தியடைந்த குடும்பத்தை தேடிச் சென்ற பிரதியமைச்சர்
இவ்வாறு கிராம மக்களிடையே காணப்பட்ட தெளிவின்மை சுயநல போக்கின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுவனை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேரில் சென்று பார்வையிட்டதோடு அத்துடன் குற் றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதுவுமில்லை எனவும் அவருடன் அனைவரும் வழமை போலவே பழகும்படி கூறி பிரதியமைச்சர் சிறுவனை தன்னுடன் அணைத்துக் கொண்டு சிறுவனுடன் சில மணித்தியாலங்கள் தனது காலத்தினை கடத்தியது பல
ருக்கும் நெகிழ்ச்சியை வரவழைத்தது.
மறுபுறம் அக்கிராம வாசிகளுக்கு எயிட்ஸ் தொடர்பான தெளிவினை வழங்க பிரதியமைச்சர் முற்பட்ட வேளை கிராமவாசிகளினால்பல்வேறு விமர்சனத்திற்கும்அவர் உள்ளானார்.
ஜனாதிபதியிடமிருந்து வந்த
தொலை பேசி அழைப்பு
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட அவரின் தாயை சந்தித்த சந்தர்ப்பத்தில் தனது தொலை பேசி மூலம்ஜனாதிபதிக்கு அழைப்பினை ஏற்படுத்தி தாயிடம் கொடுத்துள்ளார். இதன் போது தனது பிள்ளைக்கு பாடசாலை ஒன்றை பெற்றுதருமாறு ஜனாதிபதியிடம் தாயார் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தால் இதன்போது பதிலளித்த ஜனாதிபதி உங்களது குடும்பத்திற்கு
எவ்வித தொந்தரவுகளும் ஏற்படுவதற்கு இட மளிக்கப்போவது இல்லை. உரிய பாடசாலை யும் பெற்று கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆரம்பத்திலிருந்தே இந்த சிறுவனின் சம்பவம் தொடர்பில் தலையிட்டதோடு இவ்வாறான விடயங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இவரின் தலையீடு கட்டாயமாக இருப்பது தொடர்பில் கடந்தகாலங்களில்ஊடகங்களில் அவதானிக்க முடிந்தமையானது வரவேற்கத்தக்கது என்றே குறிப்பிட வேண்டும்.
உயர் நீதிமன்றில் அடிப்படை
உரிமை மீறல் மனு
தனது மகன் எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் தனது மகனின் கல்வி உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் தாயார் கொழும்பு உயர் நீதி மன்றில் அடிப்படை
உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார். அத்துடன் கல்வி அமைச்சர், குளியாப்பிட்டிய வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்டவர்களையும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவு
பாதிக்கப்பட்ட சிறுவன் தொடர்பில் பல்வேறு செய்திகள் ஊடகங்களிலும் பத்திரி கைகளிலும் தொடர்ச்சியாக வெளிவர இது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு இது தொடர்பில்அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில் பாதிக்
கப்பட்ட சிறுவனுக்கு நாட்டின் எந்தவொரு பாடசாலையிலும் அனுமதியினை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டார்.
அன்றைய தினமே இது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாடசாலையொன்றை பெற்றுக்கொடுப்பதோடு வீடொன்றையும் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கைகொடுத்த கண்டி திருத்துவ கல்லூரி
பிரதமரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகள் குறித்த
சிறுவனை தமது பாடசாலையில் சேர்த்துக்
கொள்ள விரும்பின. எனினும் முந்திக்கொண்ட கண்டி திருத்துவ கல்லூரி உடனடியாக இது
விடயமாக கல்வி அமைச்சர் அகில
விராஜ் காரியவசத்துடன் பேச்சுக்களை நடத்தியது. அதன் பலனாக கல்வி அமைச்சருக்
கும் திருத்துவ கல்லூரி அதிபருக்கும் இடை
யிலே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்
றும் கைச்சாத்தானது. இந்நிலையில் குளியாபிட்டியை சேர்ந்த அந்த சிறுவனின் கல்விக் கனவு நனவாகும் சூழல்
மீண்டும் உருவாக்கப்பட்டது. சிறுவனின் கல்வி நடவடிக்கை நிறைவுறும் வரை அது தொடர்பிலான பூரண செலவினங்களை ஏற்றுக் கொள்ளவும் கல்வி அமைச்சு முன் வந்துள்ளது. இதனை விட சிறுவனின் தாய்க்கு கண்டி பகுதியில் வீடொன்றை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் குளியாப்பிட்டி வதந்தியொன் றினால் தோற்கடிக்கப்பட்ட மனிதாபிமானம் கண்டியில் வெற்றி பெற்றுவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM