ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரம்பாதெனிய பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 05 பேர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த தனியார் பஸ் ஒன்றும் சீதுவையிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சுற்றுலாவிற்க்கு பயணிகளை ஏற்றிசென்ற வேன் ஒன்றும் கினிகத்தேன ரம்பாதெனியா பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த விபத்து .சனிக்கிழமை காலை 07 மணி அளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
அதிகவேகத்தில் பயனித்த தனியார் பஸ்ஸின் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சீதுவையில் இருந்து சுற்றுலா சென்ற வேனில் 11 பேர் பயணித்த நிலையில் இதில் ஐவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM