மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ் வேலையற்ற பட்டதாரிகள்

Published By: Digital Desk 4

22 Sep, 2018 | 01:16 AM
image

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை சனிக்கிழமை முற்பகல்-10 மணி முதல் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் கருத்துத் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் முறையற்ற வகையில் பட்டதாரிகளுக்கான அரச நியமனங்களை வழங்கி வேலையற்ற பட்டதாரிகளைக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை அவர்கள் வெளியேறிய ஆண்டடிப்படையில் வழங்காது புள்ளியடிப்படையில் வழங்கி வருகிறது. இதன் மூலம் வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளான நாம் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளோம்.

இது தொடர்பில் நாம் இனியும் வாய்மூடி மெளனம் காப்பதால் பலன் எதுவுமில்லை. எனவே, மீதமுள்ள நியமனங்களை சரியான ஒழுங்கு முறையில் வழங்க வலியுறுத்தியும், மாகாண அமைச்சின் கீழுள்ள வெற்றிடங்களையும் நிரப்ப ஒன்றிணைவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44