பிரதேசச் செயலாளருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் இடைநிறுத்தம்

Published By: Digital Desk 4

21 Sep, 2018 | 07:52 PM
image

முசலி பிரதேச செயலருக்கு எதிராக முசலி பிரதேசச் செயலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெறவலிருந்த  ஆர்ப்பாட்டம் ஒன்று சிலாபத்துறை பொலிஸாரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முசலி  பிரதேசச்  செயலகத்திற்கு முன் மக்கள் இன்று காலை ஒன்று கூடுவதை அவதானித்த பொலிஸார் விரைந்து சென்று அங்கு ஒன்று கூடுபவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை அழைத்து பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் போது ஆர்ப்பட்டங்கள் செய்வதற்கு முன் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னதாக  பிரதேச பொலிஸ் நிலையத்தில் முறையான அனுமதியினைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால்  இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக எந்த அனுமதியினையும் எவரும் பெறவில்லை. இதன் காரணமாக குறித்த ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முடியும். எனவே முறையான அனுமதியினை பெற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முசலி பிரதேசச் செயலாளருக்கு அச்சுரூத்தல் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கிராம அலுவலகரின் ஆதரவாளர்கள் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57