முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் காணிப்பிணக்குத் தொடர்பில் பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரி, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை பணிப்பாளர் ஆகியோரிடம் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் திகதி காணிப்பிரச்சினை காரணமாக இரண்டு தரப்புக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸாரும் வைத்தியசாலையில் அதிகாரிகள் சிலரும் இணைந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளிப்படுத்தி விசாரணைகளை திசை திருப்பியுள்ளமை தொடர்பில் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட தரப்பினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்.பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிகாரி, முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை பணிப் பாளர் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM