மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரால் அநியாயமாக பறிபோனது குடும்பஸ்தரின் உயிர்

Published By: Daya

21 Sep, 2018 | 04:07 PM
image

புத்தூர்   - மீசாலை பிரதான வீதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர்  உயிரிழந்தார்.

புத்தூர்- மீசாலை வீதியில் நடந்து சென்ற இளம் குடும்பத்தலைவர் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளினை செலுத்தி வந்தவர் பின்பக்கமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர் - ஊறனி பகுதியைச் சேர்ந்த 28 வயமதன  இரத்தினம் மோகன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் தற்போது அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32