மன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில் காணப்பட்ட 'தராசு' அளவீடுகள் பிழையாக காணப்பட்ட நிலையில் குறித்த நிலையத்திற்கு எதிராக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் அமைந்திருந்த தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்திற்கு நேற்று இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரனை அதிகாரிகள் சென்று திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த நிலையத்தில் கடல் உணவுகளை நிறுவை செய்வதற்காக காணப்பட்ட தராசுகள் அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டது.
இதன் போது குறித்த தராசுகளின் அளவீடுகளில் பிழை உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக குறித்த கடல் உணவு கொள்வனவு நிலையத்திற்கு எதிராக நேற்று மதியம் மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடல் உணவு கொள்ளனவு நிலையத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபா அபராத தொகையாக செலுத்த உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM