(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் பிரயோகம் செய்துள்ளாரா? என கூட்டு எதிரணியினர் சபையில் கேள்வி எழுப்பினர்.
இதன்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ கோரவில்லை. தொலைபேசி உரையாடல் தொடர்பில் எனக்கு எதுவும் கூற முடியாது. எனினும் பொலிஸ் மா அதிபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் அவருக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரம் நிறைவடைந்த பின்னர் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் மேற்கண்டவாறு விசேட கேள்வியொன்றை ஆளும் தரப்பின் மீது தொடுத்தார். இதன்போதே நளின் பண்டார இவ்வாறு பதிலளித்தார்.
அரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்கின்றனர். ஆகவே பொலிஸ் மா அதிபர் விவகாரம் எம்மால் தலையிட முடியாது.ஏனெனில் தற்போது ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனினும் பொலிஸ் மா அதிபர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அமைச்சு மட்டத்தில் விசாரணை முன்னெடுக்கவுள்ளோம். தற்போது அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார இது தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM