கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கழிவுகளை அகற்றுவது மிகவும் சிரமமாக இருப்பதாக கரைச்சி பிரதேச சபை சுட்டிக் காட்டியுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் கரைச்சி பிரதேச சபையின் கழிவகற்றும் குப்பைத்தொட்டியில் நோயாளிகளுக்கு மருந்து ஏற்றும் ஊசிகள் சிறிஞ் உடனும் தனியாகவும் போடப்பட்டுள்ளமையால் கழிவகற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் 09 ஆம். 12 ஆம் திகதிகளில்
கரைச்சி பிரதேச சபை தவிசாளரினால் அனுப்பப்பட்ட கடித்ததில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அத்துடன் குறித்த வைத்தியசாலையில் கழிவகற்றும் போது நோயாளர்களுக்கு ஏற்றப்பட்ட ஊசி குற்றி 11 ஆம் திகதி அன்றும் ஒரு ஊழியர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்
இப் பிரச்சனை வைத்தியசாலை நிர்வாகத்தால் சீர் செய்யப்படாமையால் கிளிநொச்சி வைத்தியசாலை கழிவு அகற்றுதலில் தொடர்ந்தும் இழுபறிகள் நீடித்துள்ளது இந்நிலைமை நீளுமாயின் கழிவகற்றும் பணி நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஓர் நோயாளிக்கு ஏற்றப்பட்ட ஊசி பிறிதொருவருக்கு குற்றினால் அவருடைய உடம்லில் உள்ள பாரிய நோய்கள் கூட ஒருவருக்கு தொற்றுவதற்கான சந்தர்ப்பம் இருப்பது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரிந்தும் இதனை சீர்செய்யாதிருப்பது ஏன் என சமூக ஆர்வகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
கரைச்சி பிரதேச சபையினரால் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதங்கள் அடங்கலாக எமது பிராந்திய செய்தியாளர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு விண்ணப்பம் செய்தமைக்கு அமைவாக இவ் ஆவணகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM