'ஜனாதிபதி கொலைச் சதி" : சு.க. உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதா? - மாற்று அணி கேள்வி

Published By: Vishnu

20 Sep, 2018 | 04:44 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றமை சதிகாரர்களுக்கு தேவையான முறையில் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. அதனால் ஜனாதிபதி சட்டம் ஒழுங்கு அமைச்சை  தனக்குக்கீழ் கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி தெரிவித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை கொலைசெய்யும் சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ருக்கின்றது. 

இதனை அரசாங்கம் பாரிய விடயமாக  கண்டுகொள்வதாக தெரியவில்லை. சதித்திட்ட சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 

ஆனால் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 23 பேரில் சிறியானி விஜேவிக்ரமவை தவிர வேறு எவரும் இது தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை. அவர்கள் இவ்வாறு மௌனம் காப்பது சதிகாரர்களுக்கு தேவையான முறையில் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36