பொது எதிரணிக்குள் கோத்தா மகிந்த என பிளவு- ஜே.வி.பி. தலைவர்

Published By: Daya

20 Sep, 2018 | 04:34 PM
image

பொதுஎதிரணி மஹிந்த ராஜபக்ஷ அணி கோத்தபாய ராஜபக்ஷ அணி என இரண்டாக பிரிந்துள்ளது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்காக கோத்தபாய அணியினர் அரசமைப்பின் 20வது திருத்தம் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்குவதை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் தங்கள் தலைவர்களின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக தங்களால் முடிந்த முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டும் பாராளுமன்றத்தை மையப்படுத்திய  ஜனநாயக முறை ஸ்தாபிக்கப்படவேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பின் 20வது திருத்தம் நிறைவேறினால் பாராளுமன்றத்தை அடுத்த வருடம் ஒன்பதாம் திகதிக்கு முன்னதாக கலைக்கவேண்டும், புதிய பாராளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவேண்டும் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் ஏழு மாதங்களால் குறையும் எனவும் ஜே.வி.பி. தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த வருட இறுதியுடன் முடிவிற்கு வருகின்றது எனினும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால் அதன் ஏற்பாடுகளின் அடிப்படையில் 2020 வரை சிறிசேன பதவியிலிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08